பொதுமக்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு - மெட்ரோவில் 5 ரூபாய் கட்டணம்.! - Seithipunal
Seithipunal


கடந்த 3-ம் தேதி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன தினம் கொண்டாடப்பட்டது. இந்தத் தினத்தை முன்னிட்டு, அன்று முழுவதும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு அதாவது பேடிஎம், வாட்ஸ்அப், போன்பே உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி மெட்ரோ ரெயிலில் பொதுமக்கள் ரூ.5 என்ற சலுகை கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அப்போது, மிக்ஜம் புயல் மற்றும் கனமழை காரணமாக அன்று இந்தச் சலுகையை பலரால் பயன்படுத்த முடியவில்லை. அதனால், இந்த கட்டண சலுகை இன்று மீண்டும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பயன்படுத்தி பொதுமக்கள் ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம்.

இந்த பிரத்யேக சலுகை மக்களின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச் சீட்டுகளை ஊக்குவிக்கவும் வழங்கப்படுகிறது. ஆகவே, மக்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

five rupees ticket in metro train


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->