ஈரோடு இடைத்தேர்தல் - விடிய விடிய வாகன சோதனையில் பறக்கும் படையினர்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறவால் காலமானார். இதனால், அந்தத் தொகுதியை காலியானதாக அறிவித்த தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன் படி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் 3 பறக்கும் படை, ஒரு வீடியோ கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ பார்வை குழு ஆகவே உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளது. 

இதுமட்டுமல்லாமல், 3 நிலை கண்காணிப்பு குழு, ஒரு கணக்கு தணிக்கை குழு ஆகியவை வேட்பு மனு தாக்கல் செய்யும் 10-ந் தேதி முதல் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், வாகன சோதனைகள் முறையாக நடைபெறுகிறதா, ஆவணங்கள் சரிபார்க்கப்படுகிறதா, பரிசுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை காவலர்கள் சோதனை செய்வதை தேர்தல் நடத்தும் அலுவலர் உறுதி செய்தார். விடிய விடிய இந்த வாகன சோதனை நடைபெற்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fly squad checking vehicles in erode for by election


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->