தீவிர வேட்டையில் போலீசார் - சென்னையில் ஒரே வாரத்தில் 42 குட்கா வியாபாரிகள் கைது.!  - Seithipunal
Seithipunal


தீவிர வேட்டையில் போலீசார் - சென்னையில் ஒரே வாரத்தில் 42 குட்கா வியாபாரிகள் கைது.! 

தமிழகத்தில் மாநில அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை என்ற பெயரில் சென்னையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் படி, போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்து கைது செய்ய அனைத்து காவல் ஆணையர் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டது. 

இந்தத் தனிப்படை போலீசார் தினமும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த 23-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையிலான ஒரு வாரக்கால கண்காணிப்பில் குட்கா கடத்தியது மற்றும் பதுக்கி விற்பனை செய்தது தொடர்பாக இதுவரைக்கும் 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 42 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடமிருந்து 105.3 கிலோ வரையிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்ததாவது:- 

போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைக் கடத்துதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தல் ஆகியவற்றைக் கண்டறிந்து இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

அப்படி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் நீதிமன்றம் மூலம் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

forty two gutka sales mans arrested in chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->