பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர், சூலூர் பகுதியில் சேர்ந்த 18 வயது பெண் கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தார்.

அப்போது சிறுமிக்கு பிரவீன் என்கிற அரவிந்த் (வயது 23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறிய இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசிக் கொண்டும் காதலை வளர்த்து வந்தனர். 

பிரவீனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிறந்தநாள் என்பதால் சிறுமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்றார்.

அப்போது பிரவீன் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கிடையே சிறுமியின் குடும்பத்தினர் கேரளா, எர்ணாகுளத்திற்கு இடம்பெயர்ந்தனர். அவர்களுடன் சிறுமியும் சென்றார். 

இந்நிலையில் திடீரென சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். 

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, பிரவீன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். 

கோவை, சூலூர் பகுதியில் சம்பவம் நடைபெற்றதால் இந்த வழக்கு கோவை மாவட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 18 வயதான சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த பிரவீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

girl molested case against pocso case filed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->