இதுவே போதும்... ''ஆட்சி மாற்றம்'' முக்கியமான ஒன்று - ஜி.கே.வாசன் ஆவேச பேச்சு.!  - Seithipunal
Seithipunal


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் காமராஜர் பிறந்த நாளான இன்று பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருச்சி, தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் குணா வரவேற்புரையாற்றினார்.

மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ், வடக்கு மாவட்ட தலைவர் ஆகியோர் பொதுக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, காவேரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு மதிக்கவில்லை. இதனை தி.மு.க அரசு கண்டுகொள்ளாமல் மௌனம் காக்கிறது. தமிழகத்தில் உண்மையான ஜனநாயகம் மலரவில்லை. 

கல்வி, விவசாயம் மோசம் அடைந்துள்ளது. விவசாயிகள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காவேரி நதிநீர் விவசாயிகளின் உயிர் பிரச்சனை. இதில் தி.மு.க அரசு நாடகமாகிறது. தி.மு.க கூட்டணி கட்சியின் ஆட்சி நடக்கும் கர்நாடகாவுக்கு சென்று தண்ணீர் பெற்று கொடுக்க எந்த ஒரு முயற்சியும் இதுவரை திமுகவினர் எடுக்கவில்லை. 

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் மோசமாகி கொலை, கொள்ளை என அதிகரித்துள்ளது போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடலா? திமுக அரசு ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும் என நாங்கள் கூறுகிறோம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் மிகவும் முக்கியமான ஒன்று என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK Vasan obsessed Tamilnadu very bad


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->