தனியார் உணவகத்தில் அரசு சத்துணவு முட்டைகள் - அதிகாரிகள் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் அரசு சத்துணவு முட்டை கள்ள சந்தையில் அமோகமாக விற்பனையாகி வருவது அம்பலமாகியுள்ளது. சத்துணவு முட்டைகள் தடையின்றி மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், துறையூரில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு மதிய உணவுக்காக வழங்கப்படும் முட்டை கள்ளச்சந்தையில் விற்பனையாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government school eggs sales illegal in trichy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->