தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டு வெட்கப்படுகிறேன் - ஆளுநர் ஆர்.என்.ரவி.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 2 ஆம் நாள் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அதன் படி இந்த ஆண்டு இன்று காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் பட்டியலின மக்களுக்கு எதிரான பாகுபாடு நீங்கவில்லை.

தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரங்களின்படி, கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் சமூகநீதி பேசுகிறார்களே தவிர நடைமுறையில் பட்டியலின மக்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை.

அதாவது, கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகள், குடிநீர் தொட்டியில் கழிவுகள் கலப்பது உள்ளிட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டு வெட்கப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

governor rn ravi speech gandhi jayanthi function


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->