திடீர்திருப்பம்: கிராம சபை கூட்டங்கள் அனைத்தும் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு!
Grama Sabha Meet TNgovt
வருகின்ற நவம்பர் ஒன்றாம் தேதி நடக்க உள்ள கிராம சபை கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் ஒன்றாம் தேதி நடக்க இருந்த கிராம சபை கூட்டங்கள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
மேலும் கிராம சபை கூட்டங்கள் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் தெரிவித்துள்ளார்.