650 கிலோ குட்கா கடத்திய வாலிபர் கைது - Seithipunal
Seithipunal


குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரில் இருந்து தென்காசிக்கு காரில் குட்கா கடத்தி வரப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து தனிப்படை காவல்துறையினர் மற்றும் வேடசந்தூர் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது போலீசாரை பார்த்தவுடன் ஒரு கார் நிற்காமல் அதிவேகத்தில் சென்றுள்ளது. அதனை மடக்கிப்பிடித்த போலீசார் சோதனை செய்ததில், 650 கிலோ குட்கா கடத்தி வரப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த விஜய்(25) என்பதும், அவர் பெங்களூரில் இருந்து குட்கா கடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து விஜயை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த குட்கா மற்றும் காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gutka smuggler arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->