ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 1 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூரில் ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திராவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், குளிப் போன்ற போதை பொருட்கள் திருவள்ளூர் வழியாக காரில் கடத்தி வருவதாக திருவள்ளூர் மாவட்ட போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

திருவள்ளூர் தாலுகா போலீசார் பட்டறை பெரும்புதூர் பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

காரில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், குளிப், புகையிலை  உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போதைப்பொருட்களின் மொத்த எடை 102 கிலோ. போதை பொருளின் மதிப்பு சுமார் 
ரூ. 1 லட்சம் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக காவல்துறை, இரண்டு பேரை கைது செய்து, கார் மற்றும் கடத்திவரப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் ஆந்திராவில் இருந்து குட்காவை கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. ஒரு போதைப்பொருட்களை யாருக்காக கடத்தி வந்தார்கள்? என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்திய வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gutka worth 1 lakh seized from Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->