மக்களே உடனே போன் சார்ஜ் போடுங்க..சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை!! - Seithipunal
Seithipunal


“சென்னை மற்றும் வட கடலோர தமிழகத்தின் பிற பகுதிகளில் நாளை (புதன்கிழமை) மாலை பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையின் நுங்கம்பாக்கம் வானிலை நிலையத்தில் செவ்வாய்கிழமை 36.3 டிகிரி செல்சியஸ் பதிவானது,” என்று வானிலை ஆய்வாளர் தெரிவித்தார்.

காஞ்சிபுரம்-திருவள்ளூர்-சென்னை-செங்கல்பட்டு பகுதிகள் மட்டுமின்றி வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் புதன்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.

கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்தது,

இந்நிலையில், சென்னையின் பெரும்பாலான முக்கிய இடங்களில் கனமழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உண்டாகி உள்ளது. திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain in various parts of Chennai


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->