ஆளுநர் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழா - உயர்கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பு..! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் 33 ஆயிரத்து 821 பேர் பட்டம் பெற்ற நிலையில், 571 மாணவர்களுக்கு ஆளுநர் நேரடியாக பட்டங்களை வழங்கினார். 

இந்த பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கம் பெற்ற 111 பேரில், 97 பேர் பெண்கள் என்பதும், முனைவர் பட்டம் பெற்ற 460 பேரில், 377 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த விழாவை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான கோவி.செழியன் புறக்கணித்தார். 

சமீபத்தில் ஆர்.என்.ரவியின் செயலும், பேச்சும் தமிழர்களின் மனம் புண்படும்படி இருந்து வருவதாகவும், இதனால் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவும் அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்திருந்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

higher education minister govu chezhiyan avoide governor programme


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->