திண்டிவனம் அருகே கோர விபத்து - தாறுமாறாக கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்த சோகம்! - Seithipunal
Seithipunal


சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று தாறுமாறாக ஓடி, 3 பேர் மீது காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி நேற்று இரவு கார் ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. தொடர்ந்து திண்டிவனம் அடுத்த  விளங்கப்பாடி அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலைகளில் தாறுமாறாக ஓடியதாக கூறப்படுகிறது.

அப்போது  இருசக்கர வாகனத்தில்  சென்றவர்கள் மீதும், சாலையோரம் நடந்துசென்றவர்கள் மீதும், கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் மற்றும் சாலையில் நடந்து சென்ற ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய காரில் பயணம் செய்தவர்கள் தப்பியோடியதாக கூறப்படும் நிலையில், அவர்களை போலீசார்  தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Horrible accident near tindivanam 3 people died in a car collision


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->