கொழுந்தனுடன் கள்ளக்காதல்... மனைவியின் கழுத்தை வெட்டிய கணவர்..! திருச்சியில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கணவர் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் கோட்டை அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு அமர்நாத் (28), ரகுநாத் (25) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் அமர்நாத்துக்கு திருமணமாகி மாரியம்மாள் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கொழுந்தன் ரகுநாதத்துடன் மாரியம்மாளுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த அமர்நாத், மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும், அதனைக் கண்டு கொள்ளாமல் மாரியம்மாள் இருந்ததால் ஆத்திரமடைந்த அமர்நாத், வாளால் மாரியம்மாளின் கழுத்தை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாரியம்மாள் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அமர்நாத், மனைவியை வெட்டிய வாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

husband who cut his wife with a sword for illegal affair in Trichy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->