இன்ஸ்டாகிராம் காதலனை கரம் பிடித்த சிறுமி மர்மமான முறையில் மரணம்.. தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து திருமணம் செய்து கொண்ட சிறுமி மர்மமான முறையில் இருந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ். இவருடைய 16 வயது மகளுக்கும், திருப்பூர் மாவட்டம் கரைப்புதூர் பகுதியை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு சிறுமி திடீரென காணாமல் போனார். இதனையடுத்து சிறுமியின் தந்தை காளையார் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் மேற்கொண்டு விசாரணையில் கரைப்புதூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு பல்லடம் கணபதி பாளையத்தில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்தது தெரிய வந்தது.

இதில் அந்த இளைஞருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் சிறுமிக்கும், இளைஞருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனையடுத்து அந்த இளைஞர் சிறுமியின் தந்தை சிவப்பிரகாசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லடம் போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று அந்த வாலிபரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Instagram love to marriage girl get suicide


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->