காலையிலேயே அடுத்தடுத்து இருவர் கொலை! திருத்தணியை தொடர்ந்து சிவகங்கையில் அரங்கேறிய கொடூரம்! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் மனோஜ் என்ற இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மனோஜுடன் வந்த அவரது நண்பர்கள் இருவர் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனோஜ் மற்றும் அவரது நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் அவர்களை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் மனோஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர்கள் இருவரும் காயமடைந்தனர்.

கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் குறித்து காரைக்குடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக இன்று காலை திருத்தணியில் மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம் நார்த்தவாடா கிராமத்தில் மாணவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பேருந்து நிறுத்தத்தில் நின்ற லோகேஷை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து திருவாலங்காடு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

karaikudi crime TN Police Thiruthani


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->