''சின்னத்துக்காக காத்து இருக்கிறேன், வந்த உடன் களத்தில் இறங்கிவிடுவேன்.'' சீமான் அறிவிப்பு...! - Seithipunal
Seithipunal


'எல்லாவற்றையும் நீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என்றால், சட்டசபை, பாராளுமன்றம் எதற்கு? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை, போயஸ்கார்டனில் நிருபர்களை சீமான் சந்தித்து பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர் அங்கு பேசுகையில், 'சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன். வந்தவுடன் களத்தில் இறங்கி விடுவேன்' என்று தெரிவித்துள்ளார். 

மேலும், நிருபரின் 'தமிழகம் டில்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என முதல்வர் பேசியுள்ளார்? என்ற கேள்விக்கு, 'முக்கியமான பேரிடர் காலங்களில் நிதி தரவில்லை. எங்களுக்கு தர வேண்டிய நிதியை தரவில்லை. ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. முக்கியமான திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை.

அதனால் என் மாநில வரி தர முடியாது என்று சொல்வது அவுட் ஆப் கண்ட்ரோல். உரிமையை பறிகொடுத்து விட்டு புலம்புவது அவுட் ஆப் கண்ட்ரோல் இல்லை என்று சீமான் பதில் அளித்துள்ளார்.

அத்துடன், அவர் மேலும் கூறுகையில்; எல்லாவற்றையும் நீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என்றால் மற்றும் சட்டசபை,பாராளுமன்றம் எதற்கு? மாநில உரிமைகளை பறித்துக் கொண்டு போன கட்சியிடமே கூட்டணி வைத்துக் கொண்டு மாநில உரிமையை பேசுவது கேலிக் கூத்தானது என்று விமர்ச்சித்துள்ளார். 

மேலும் தான் தனித்து போட்டியிடுவதாகவும், போட்டிக்கு தயார் ஆகி கொண்டு இருப்பதாகவும், சின்னத்துக்காக காத்து இருப்பதாகவும், சின்னம் வந்த உடன் களத்தில் இறங்கிவிடுவேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman announced that he will enter the field as soon as the symbol comes


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->