விளையாடச் சென்ற போது நேர்ந்த விபரீதம் - 3 சிறுவர்கள் பரிதாப பலி.!  - Seithipunal
Seithipunal


கரூர், ஆண்டாங் கோவில் புதூரை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகன் அஸ்வின் (வயது 12) அதே பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் விஷ்ணு (வயது 11) இளங்கோ மகன் மாரிமுத்து (வயது 11).

இவர்கள் மூவரும் நேற்று காலை விளையாட செல்வதாக தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர். ஆனால் மாலை நேரமாகியும் மூவரும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். 

ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இரவு 11 மணி அளவில் அதே பகுதியில் உள்ள ரவிச்சந்திரன் என்பவரது தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது மூன்று பெயரின் காலணிகள் கிணற்றின் அருகே கிடந்துள்ளதால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரவு 12 மணி அளவில் மூன்று பேரின் உடல்களையும் கிணற்றிலிருந்து மீட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களின் உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாடுவதாக தெரிவித்துவிட்டு சென்ற மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur 3 children died


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->