தருமபுரி | அரசு பள்ளி மனைவிக்கு பாலியல் தொல்லை : ஆபாச ஆசிரியராக மாறிய ஆங்கில ஆசிரியர்.!
kumarasamipet school girl harassment
தருமபுரி மாவட்டம், குமாரசாமிபேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.
இந்தப் பள்ளியில் ஆங்கில பாட ஆசிரியராக பணியாற்றி வரும் பன்னீர்செல்வம் அந்த மாணவியிடம் கையெழுத்து சரியில்லை என்று கூறி தகாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இது தொடர்பாக அந்த மாணவி தரப்பில் தருமபுரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும், அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவி புகார் கொடுத்த விபரம் தெரிய வந்ததும் பன்னீர்செல்வம் தலைமறைவாகி உள்ளார். இதனால் அவரது செல்போன் எண்ணை வைத்து காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.
English Summary
kumarasamipet school girl harassment