310 தொகுதிகளில்...  பா.ஜ.க. தான் வெற்றி - எல்.முருகன் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


மத்திய மந்திரி எல். முருகன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசி இருப்பதாவது, மக்களவைத் தேர்தலில் இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்குப்பதிவில் 310 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி அடையும். 

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெற உள்ள தேர்தலிலும் பா.ஜ.க 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று வரலாற்று சாதனையை அடைக்க உள்ளது. 

யாரும் இதுவரை எதிர்பாராதவிதமாக அரசியல் புரட்சி இந்த தேர்தலில் நடைபெற்று இருக்கிறது. வருகின்ற நான்காம் தேதி தெரியும் தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாங்கள் சமர்ப்பிக்கிறோம். 

தமிழக முதல்வர் மத்தியில் இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார். அது அவருடைய பகல் கனவாக இருக்கப்போகிறது. 

காங்கிரஸ் 40 இடங்களில் கூட வெற்றி கிடையாது. பிரதமர் பேசியதை சரியாக புரிந்து கொள்ளாமல் முதலமைச்சர் பொதுமக்களிடையே பொய்யை பேசுகிறார். பிரதமர் என்ன பேசினார் என்பதை முதலில் பிரதமர் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

L Murugan says BJP 310 constituencies won


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->