17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.! போக்சோவில் கூலித்தொழிலாளி கைது.!
Laborer arrested for rape 17 year old girl in Kovai
கோவை மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் செங்கத்துரை பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி அருள்குமார் (24). இவருக்கும், பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயதுடைய சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமியிடம் அருள்ராஜ் செல்போனில் பேசும்போது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்பு சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமையை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளி அருள்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
Laborer arrested for rape 17 year old girl in Kovai