15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! போக்சோவில் கூலி தொழிலாளி கைது.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலி தொழிலாளியை போச்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே குப்பம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் கூலி தொழிலாளி வசந்தகுமார் (21). இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பள்ளி மாணவி கரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், வசந்த்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வசந்தகுமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Laborer arrested for sexually harassing 15 year old girl in karur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->