7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சாமுவேல்(43). இவர் 7 வயதுடைய சிறுமிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு சாமுவேலை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சாமுவேலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Laborer who sexually harassing 7 year old girl gets 20 years in prison in virudhunagar


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->