#திருப்பூர் || மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர் கைது - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் ரஹீம் குமார் (24). இவர் சட்ட விரோதமாக அனுப்பட்டி பகுதியில் மது விற்பனை செய்வதாக காமநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது மது விற்பனை செய்து கொண்டிருந்த ரஹீம் குமாரை கையும் களவுமாக போலீசார் பிடித்துள்ளனர்.

இதையடுத்து அவரிடம் இருந்த 4 குவாட்டர் மது பாட்டில், 10 பீர் பாட்டில்கள் மற்றும் 600 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் ரஹீம் குமாரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Liquor seller arrest in Tiruppur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->