நிறுத்த முயன்ற லாரி மீது அதிவேகமாக மோதிய கார்: 3 பேர் பலியான சோகம்! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி, பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இன்று அதிகாலை சரக்கு லாரி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. 

அப்போது அந்த லாரியை எந்த ஒரு அறிவிப்பும் இன்றி ஓட்டுநர் சாலையோரம் உள்ள கடையின் அருகில் நிறுத்த முயன்றபோது அதே வழியாக 5 பேர் பயணித்த கார் ஒன்று வேகமாக வந்து எதிர்பாராதவிதமாக சரக்கு லாரியின் பின்னால் பகுதியில் மோதியது. 

இந்த விபத்தில் காரில் வந்த 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். மேலும் 2 வாலிபர்கள் பலத்த காயமடைந்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயமடைந்த வாலிபர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். 

பின்பு இந்த விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காரில் பயணித்தவர்கள் திருச்சியை சேர்ந்தவர்கள் எனவும் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. 

மேலும் இவர்கள் திருப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்று விட்டு இன்று அதிகாலை சூளகிரி வந்த போது விபத்து ஏற்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

lorry crashed car 3 people killed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->