கோவை : கார் மீது டேங்கர் லாரி மோதி விபத்து‌‌.. பெண் பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கார் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் பயிற்சி மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை பிருந்தாவன் நகரில் ராமசிகாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமசிவானி என்ற மகள் உள்ளார். இவர் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் ராமசிவானி நேற்று மதியம் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார். அப்போது இவர் மதுக்கரை எல்.அன்.டி நெடுஞ்சாலை சந்திப்பு அருகே சென்ற போது எதிரே வேகமாக வந்த டேங்கர் லாரி கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமசிவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lorry tanker and car accident training women doctor death


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->