மதுரை | கட்டிட வேலை செய்யும் போது எற்பட்ட விபத்தில் தொழிலாளி மரணம்! - Seithipunal
Seithipunal


விளாங்குடி அருகே கட்டிட வேலை செய்து கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி பலி:

மதுரை: விளாங்குடியில் உள்ள சொக்கநாதபுரம் முதலாவது தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டுவதற்கான கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.

தற்போது கட்டிட வேலை 70 சதவீதம் முடிக்கப்பட்ட நிலையில் பூசு வேலை நடைபெற்று வந்தது. இன்று காலை கட்டிடத்தின் படிக்கட்டு பகுதியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள ரெட்டியபட்டியை சேர்ந்த ஜோதி (வயது 52), மூக்காயி (வயது 50), தொண்டிச்சாமி (வயது 55), கட்டையன் (வயது 43) ஆகியோர் நின்று வேலை பார்த்து கொண்டிருந்தனர். 

அப்போது படிக்கட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் நான்கு பேரும் சிக்கியதால் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்கும் பணியை செய்தனர். 

இது குறித்து தகவல் அறிந்து வந்த கூடல்புதூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் இடிபாடுகளை அகற்றியபோது விபத்தில் சிக்கியிருந்த மூக்காயி இறந்தது தெரியவந்தது. 

போலீசார் உடனடியாக அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு   அனுப்பி வைத்தனர். மற்ற 3 பேர் படுகாயங்களுடன் மீட்டு அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கூடல்புதூர் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, இந்த விபத்து தொடர்பாக தலைமறைவான கட்டிட பொறியாளர் மற்றும் காண்டிராக்டர் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai construction work during woman death


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->