மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு ஜாமின்!
Mahavishnu bail case order
பரம்பொருள் பவுண்டேஷன் என்கிற அமைப்பைச் சேர்ந்த மகா விஷ்ணு என்கிற சொற்பொழிவாளர், சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு மூட நம்பிக்கையை ஊக்கப்படுத்தும் வகையில் உரையாற்றினார்.
குறிப்பாக மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.
இதற்க்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும், சைதாப்பேட்டை, திருவொற்றியூர் காவல் நிலையம் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த மகா விஷ்ணுவை, விமான நிலையத்திலிருந்து ரகசிய இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்திஅவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு தரப்பில் அளிக்கப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி, மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளனர்.
English Summary
Mahavishnu bail case order