வீட்டு வாசலில் வாலிபர் வெட்டிக் கொலை - மதுரையில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள சிலைமான் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவருடைய மகன் அழகர்சாமி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகாததால் கட்டிட வேலை உட்பட கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அழகர் சாமியின் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வெளியில் நின்றுகொண்டு அவரை வேலைக்கு வருமாறு அழைத்துள்ளனர். 

இதனால் அழகர்சாமி வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் அவரை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் நிலைகுலைந்த அழகர்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மதுபோதையில் ஏற்பட்ட முன்விரோதம் மற்றும் தகராறில் அழகர்சாமி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. 

அதன் படி போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். வேலைக்கு அழைப்பது போல் அழைத்து வீட்டின் வாசலிலேயே வாலிபரை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man murder in madurai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->