இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. மார்ச் 5ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்.!
March 5 mega employment camp in kallakuruchi district
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர்.
இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம், தமிழ்நாடு அரசு நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் டாக்டர்.ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு வரும் மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதன்படி, இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம் டாக்டர்.ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறுகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்துகொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார்த் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
English Summary
March 5 mega employment camp in kallakuruchi district