13 ஆவது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!  - Seithipunal
Seithipunal


அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சட்டவிரோத பணி பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். 

இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார். 

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜரானார். 

இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 13 ஆவது முறையாக ஜனவரி 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister Senthil Balaji custody extension


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->