தொழிலாளர் தினம் - மே தின பூங்காவில் சிவப்பு நிற உடையில் மரியாதை செலுத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தொழிலாளர் தினம் - மே தின பூங்காவில் சிவப்பு நிற உடையில் மரியாதை செலுத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்.!

ஒவ்வொரு வருடமும் மே மாதம் ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதன் படி இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மே தின பூங்காவில் உள்ள நினைவு சின்னத்திற்கு தி.மு.க. தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

இந்த பூங்காவில் தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச. பேரவை சார்பில் மே தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவப்பு நிற உடை அணிந்து கலந்து கொண்டு நினைவு சின்னத்திற்கு மரியாதை செலுத்தினார். 

அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் பூங்காவில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin respect in may day park memorable statue in chennai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->