சேலம் || மாற்றுத்திறனாளி பெண் 3 மாத கர்ப்பம்.! தாயின் கள்ளக்காதலன் கைது.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணை மூன்று மாத கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் சேலதாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 60 வயதுடைய மூதாட்டி. இவருக்கும், சிவதாபுரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் சுப்பிரமணி அடிக்கடி மூதாட்டி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்பொழுது மூதாட்டியின் 40 வயது மாற்றுத்திறனாளி மகளுடன் பழகிய சுப்ரமணி, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து மூதாட்டியின் மகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக மகளை மூதாட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மூதாட்டியின் மகள் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி இது குறித்து மகளிடம் விசாரித்தபோது, சுப்ரமணி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து மூதாட்டி சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மாற்றுத்திறனாளிப் பெண்ணை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் சுப்ரமணியை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother illegal boyfriend arrested for Disabled woman 3 month pregnant in salem


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->