வட்டிக்கு..குட்டி! வாங்கிய கடனுக்காக பலபேருக்கு 16 வயது மகள்களை கூட்டிகுடுத்த கொடூர தாய் கைது! - Seithipunal
Seithipunal


சென்னையில் வட்டிக்கு வாங்கிய கடனுக்காக 16 வயது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை வியாசர்பாடி கணேசபுரத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது கணவர் நிஷாந்த். இவர்கள் இருவரும் இணைந்து வட்டிக்கு பணம் குடுக்கும் தொழில் ஈடுப்பட்டு வருவது மட்டுமல்லாமல், விபச்சாரமும் செய்து வருவதாக கூறப்படுகிறது.

முத்துலெட்சுமியிடம் சிறுமியின் தயார் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். பணத்திற்க்கான வட்டியை இரண்டு மாதங்களாக சிறுமியின் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வாங்கிய கடனுக்காக தனது 16 வயது மகளை விபச்சாரத்திற்காக முத்துலட்சுமி விடும் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமி ஆறு மாதங்களுக்கு முன் உடல் நல பாதிக்கப்பட்டதால் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். ஆனால் அவரது தாயார் மீண்டும் சிறுமியை முத்துலட்சுமி விடும் ஒப்படைத்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார்  சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முத்துலட்சுமி சிறுமியின் தயார் ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர், சிறுமியை பாலியல் ஈடுபட்ட முத்துலட்சுமியின் கணவர் நிஷாந்த், புளியந்தோப்பை சேர்ந்த அஜித்குமார், புயல் காவாங்கறையை சேர்ந்த மகேஸ்வரன் உள்ளிட்ட  ஆறு பேரை போக்சோ சட்டத்தில் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mother who engaged her 16 year old daughter in prostitution for an interest loan was arrested in Chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->