மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் துரைராஜ்(37). இவர் தனியார் நிறுவனத்தில் சர்வீஸ் மேனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சங்கரேஸ்வரி.

இந்நிலையில் நேற்று மாலை துரைராஜ் இருசக்கர வாகனத்தில் பாப்பநாயக்கன்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ஒன்று துரைராஜ் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் படுகாயமடைந்த துரைராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த துரைராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Motorcycle accident in madurai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->