மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கிய நாகை மீனவரின் உடல் - போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கிய நாகை மீனவரின் உடல் - போலீசார் விசாரணை.!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரகு. இவர் கடந்த 11-ந்தேதி தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென படகு கவிழ்ந்ததில் ரகுவின் நண்பர்கள் இருவரும் நீச்சல் அடித்துக்கொண்டு கரைக்கு வந்துவிட்டனர். 

ரகு மட்டும் கடலில் தவறி விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தார். இதையடுத்து மீனவர்கள் மற்றும் போலீசார் ரகுவின் உடலை கடந்த 12 நாட்களாக தனிப்படகில் சென்று தேடி வந்தனர். இருப்பினும் அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. 

இது தொடர்பாக நாகப்பட்டினம் போலீசார் கடலோர மாவட்டங்களில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும், கடலோர பாதுகாப்பு படையினருக்கும் ரகுவின் உடலை கணடுபிடித்து தருமாறு தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் நேற்று மாமல்லபுரம் கடற்கரையில் அழுகிய நிலையில் ஒருவரது உடல் கரை ஒதுங்கி இருப்பதாக உள்ளூர் மீனவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அது நாகப்பட்டினம் கடலில் தவறி விழுந்து இறந்த ரகு என்பது தெரிய வந்தது.

உடனே மாமல்லபுரம் போலீசார் சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினருக்கும், அங்குள்ள போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் போலீசார் ரகுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nagai fisherman body rescue in mamallapuram sea


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->