படகு, வலைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு.. குவிக்கப்பட்ட போலீசார்.! துறைமுகத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூர் துறைமுகத்தில் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைபர் படகு வலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தீ வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதில் கீழச்சேரி மற்றும் பட்டினச்சேரி கிராமம் மீனவர்களுக்கு இடையே பல மாதங்களாக பிரச்சனை மற்றும் மோதல் ஏற்பட்டு வருகிறது. 

இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கீழ் பட்டினச்சேரி பகுதியைச் சேர்ந்த விஜி என்பவரின் பைபர் படகு மற்றும் வலைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். 

இது குறித்து அறிந்த அப்பகுதி பெண்கள் தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறைமுகத்தில் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் 5 பேர் மீது சந்தேகத்தின் பேரில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமலிருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nagapatinam boat and net fired


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->