நாமக்கல்: அரசுப் பள்ளியில் மனித மலத்தை பூசிய விவகாரம் - அம்பேத்கர் நகர் துரைமுருகன் கைது! - Seithipunal
Seithipunal


நாமக்கல்லில் அரசுப் பள்ளியில் மனித மலத்தை பூசிய விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டி பகுதியில் தமிழக அரசின் மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் சுற்றுச்சூழல் மற்றும் சத்துணவு கூடத்தின் கதவில் மனித மலத்தை மர்ம நபர் பூசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

ஏற்கனவே வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், எருமைப்பட்டி அரசு பள்ளியில் மனித மலம் பூசப்பட்டது மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. 

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், எருமைபட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த துரைமுருகன் என்பவர் தான் இந்த வேலையை செய்தது சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரிய வந்தது.

இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், பள்ளியின் சமையல் பணியாளர்களுடன் ஏற்பட்ட மோதல், முன் விரோதம் காரணமாக பழிவாங்கும் நோக்கில் மது போதையில் இதனை துரைமுருகன் செய்ததாக தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து துரைமுருகனை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Erumaipatti school issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->