இறந்ததாக அடக்கம் செய்த மூதாட்டி - உயிரோடு வந்தது எப்படி? - Seithipunal
Seithipunal


சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக கருதி அடக்கம் செய்யப்பட்ட பின் மீண்டும் உயிரோடு வந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரா. 72வயதான இந்த மூதாட்டி தனது மகன் வடிவேலுடன் வாழ்ந்து வருகிறார். அடிக்கடி கோவிலுக்கு செல்லும் பழக்கம் உடைய சந்திரா தனது வீட்டில், தான் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். 

சிறிது நேரத்திற்குப் பின்னர்  கூடுவாஞ்சேரி அருகே மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை கேட்ட சந்திராவின் உறவினர்கள் சந்திரா தான் உயிரிழந்ததாக கருதியுள்ளனர். ரயிலில் அடிபட்டு உயிரிழந்த மூதாட்டியின் உடல் தனது அம்மாவின் உருவத்தோடு ஒத்துப்போனதால் அது தன் அம்மா சந்திரா தான் என்று வடிவேலும் உறுதி செய்துள்ளார். 

இதையடுத்து, சந்திராவின் புகைப்படத்தோடு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டி, உறவினர் அனைவருக்கும் தகவல் தெரிவித்து உடலைப் பெற்று வந்து, நல்லடக்கம் செய்தனர்.

இந்நிலையில் மறுநாள் காலை படையல் போட்டபோது தாய் சந்திரா வீட்டுக்கு திரும்பி வந்ததைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர். அதன்பிறகுதான் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது தாய் சந்திரா இல்லை என்றும், வேறொரு மூதாட்டியின் உடலைப் பெற்று வந்து நல்லடக்கம் செய்துள்ளோம் என்றும் சந்திராவின் உறவினர்களுக்கு தெரியவந்தது. 

இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து,  உயிரிழந்த மூதாட்டியின் உடல் யாருடையது என்று குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near chennai old lady accident in train


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->