அழகு நிலையத்தில் பெண்களை வைத்து விபச்சாரம் - ஒருவர் கைது.!  - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, ஓசூரில் அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அந்த தகவலின் படி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், ஓசூர் வைஷ்ணவி நகர் பகுதியிலும், மாருதி நகர் பகுதியிலும் செயல்பட்டு வரும் இரண்டு அழகு நிலையங்களில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, போலீசார் அந்த அழகு நிலையங்களை நடத்தி வந்த ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் போலீசார் பிரகாசுக்கு உடந்தையாக இருந்த கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு அருகே நாகசெட்டிஹள்ளி பகுதியை சேர்ந்த தீபிகா என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near krishnagiri man arrested for Adultery case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->