இளம்பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நைஜீரிய வாலிபர் கைது.!!
nigeria youth arrested for money fraud in young womans
இளம்பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நைஜீரிய வாலிபர் கைது.!!
நம்மாழ்வார்பேட்டை, பராக்கா ரோடு முதல் தெருவைச் சேர்ந்தவர் சுதாகர். அவரது மகள் அஸ்வினி. இவர், அதேபகுதியில் உள்ள அழகு நிலையத்தில், பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்தநிலையில், அஸ்வினி கடந்த ஆறாம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த தற்கொலை சம்பவத்தில் போலீசார் நைஜீரியாவை சேர்ந்த மூசா என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில், அந்த நபர் லண்டனில் இருந்து பேசுவதாக தெரிவித்து டெல்லியில் இருந்தபடியே அஸ்வினியை காதலிப்பதாக கூறி ஏமாற்றியுள்ளதும், பரிசு பொருட்களை அனுப்பி வைத்திருப்பதாக கூறிவிட்டு சுங்க துறை அதிகாரி என்றும் பேசி மிரட்டி பணம் பறித்துள்ளார்.
இதனால் பயந்துபோன அஸ்வினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. மேலும், மூசா இதுபோன்று பல இளம்பெண்களை ஏமாற்றி தினமும் ரூ. 1 லட்சம் வரையில் பணம் பறித்திருப்பது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் கூறியதாவது:-
"மூசா ஆன்லைனில் பழகி ஏமாற்றுவதையே வழக்கமாக வைத்து பலரை ஏமாற்றி தினமும் பணம் பறித்து வந்துள்ளார். இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த வேறு யாரும் ஏமாற்றப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றுத் தெரிவித்தனர்.
English Summary
nigeria youth arrested for money fraud in young womans