பொது கழிப்பிடத்தில் வைத்து 8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்.. 50 வயது கொடூரன் கைது..!
old man arrested In POCSO In chennai
8 வயது சிறுமிக்கு ஆறு மாத காலமாக பாலியல் தொல்லை அளித்து வந்த துப்புரவு ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த பூபதி நகர் பகுதிகளில் பொது கழிப்பிடத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் எட்டு வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பதும் மாநகராட்சி துப்புரவு பணியாளராக பணியாற்றி வருவது தெரிய வந்தது.
மேலும் கடந்த ஆறு மாத காலமாக சிறுமிக்கு பொது கழிப்பறையில் வைத்து பாலியல் தொல்லை அளித்து வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
old man arrested In POCSO In chennai