மதுரை || ஆளுநர் சென்ற சாலையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


பாஜகாவில் மூத்த தலைவராக இருந்து வந்தவர் இல.கணேசன். தமிழகத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2021-ம் ஆண்டு மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இவர், தமிழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று பகல் 11.20 மணிக்கு மதுரை வந்தார். 

அதன் பின்னர், விமான நிலையத்தில் இருந்து அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு தங்கு விடுதியில் ஓய்வெடுத்துக்கொண்டு பின்னர் நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆளுநர் இல.கணேசனின் பாதுகாப்பு வாகனம் செல்லும் பகுதியான கே.கே.நகர் வக்ஃபு வாரிய கல்லூரி எதிரே 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென தனது உடல் முழுவதும் தின்னரை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். 

இதைப்பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் உடனே ஓடி வந்து, முதியவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஆளுநர் இல. கணேசன் பாதுகாப்பு வாகனம் செல்லும் வழியில் தீக்குளித்த முதியவர் யார்? எதற்காக அவர் தீக்குளித்தார் என்று மதுரை அண்ணா நகர் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால், அபகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

old man sucide attempt in madurai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->