கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்... மீண்டும் நீட்டிக்கப்பட்ட காவல்.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம், ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மினவர்கள் கடந்த ஒன்றாம் தேதி மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர். 

தமிழக மீனவர்கள் அதிகாலையில் கச்சத்தீவு - நெடுந்தியவுக்கு இடையே மீன்களை பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 4 நாட்டு படகுகளை சுற்றி வளைத்து எல்லை தாண்டி வந்ததாக தெரிவித்து 25 மீனவர்களை சிறைபிடித்தனர். 

மேலும் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் தமிழக மீனவர்கள் 25 பேரின் காவல் இன்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து 25 மீனவர்கள் இன்று காலை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழக மீனவர்களுக்கு வருகின்ற 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pamban fishermen custody extension


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->