#BREAKING: உலகத் தமிழர்களே... தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்..! பழ.நெடுமாறன் தகவல்..!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் நலமுடன் இருப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது "தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களைப் பற்றிய ஒரு உண்மை அறிவிப்பினை வெளியீடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

சர்வதேச சூழலும், இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பிய சிங்கள மக்களின் போராட்டமும், தமிழின தேசிய தலைவர் பிரபாகரன் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலை உருவாகியுள்ளது. 

இந்த சூழலில் தமிழின தேசிய தலைவர் நலமுடன் இருக்கிறார்கள் என்ற செய்தியை உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட ஐயங்களுக்கும் யூகங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறோம்.

தமிழீழ மக்களின் விடியலுக்கான யுத்தத்தை அவர் விரைவில் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றிணைந்து அவருக்கு முழுமையான ஆதரவை வழங்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.

விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதுவாக இருந்தாலும் அந்த நாடுகளை தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. அவர்களை எதிர்த்து போராடி இருக்கிறார்கள்.

இந்தியாவுக்கு எதிரான எந்த நாடுகளுடனும் எந்த காலகட்டத்திலும் அவர்கள் எத்தகைய உதவிகளையும் பெற்றதில்லை. அவர்களுக்கு அவசியம் தேவைப்பட்ட காலத்தில் கூட இந்தியாவுக்கு எதிரான நாடுகளிலும் இருந்து உதவி பெற வில்லை. 

தற்பொழுது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்தியாவுக்கு எதிராக தலைமையாக்கும் வகையில் சீனா ஈடுபட்டுள்ளதையும் இந்திய பெருங்கடல் ஆதிக்கம் சீனாவின் கையில் சிக்கும் நிலையை எண்ணிப் பார்த்து அதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டிக்கொள்கிறோம்.

இந்த முக்கியமான சூழலில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் தமிழீழ மக்களும் ஒன்று இணைந்து தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என அனைவரையும் வேண்டிக் கொள்கின்றோம்" என்ன செய்தியாளர்கள் சந்திப்பில் பழ.நெடுமாறன் பேசியுள்ளார். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததாக நம்பப்படும் நிலையில் பழ.நெடுமாறனின் இத்தகைய அறிவிப்பு உலகத் தமிழர்களுக்கு இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pazha Nedumaran reports LTTE leader Prabhakaran is alive


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->