புதுவையில் இருந்து கடத்திவரப்பட்ட சாராயம்! 130 மதுபாட்டல்கள் பறிமுதல்! - Seithipunal
Seithipunal


புதுவை மாநிலத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுச்சேரி மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு மதுபாட்டல்களை கடத்தி வந்து விற்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மது பாட்டில் விலை குறைந்த அளவில் விற்கப்படுவதால் பலர் புதுச்சேரிக்கு சென்று மதுபாட்டல்களை வாங்கி வந்து தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால் தமிழகம் புதுவை மாநில எல்லையோர பகுதிகளில் போலீசார் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கிளியனூர் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட தென்குடிபக்கத்தில் வாகன சோதனை போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சாக்கு மூட்டையுடன் ஒரு வாலிபர்  இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளார். சந்தேகத்துக்கு இடமாக வேகமாக வந்து அவரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புதுவை மாநில குவாட்டர், ஃபுல் பாட்டில்களும் சாராயமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் புதுவை மாநிலம் பேட்டை சேர்ந்த சரவணன் என்பதை தெரியவந்தது. அதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 130 குவாட்டர் பாட்டில்கள், 4 ஃபுல் பாட்டில்கள், 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police seized bottles of liquor smuggled from Puduvai state on a two wheeler


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->