நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. போதை ஆசாமிக்கு தர்ம அடி..! - Seithipunal
Seithipunal


சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.   

ஈரோடு நகரின் பிரதான பகுதியான பன்னீர் செல்வம் பூங்கா  உள்ளது. இந்த பூங்காவின் அருகிலுள்ள சாலையில் இளம்பெண் ஒருவர் வந்துகொண்டிருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த இளைஞர் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பெண்ணை தக்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த இளைஞரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் கருங்கல்பாளையத்தை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Public Beaten the person who sexually harassed a woman


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->