இன்று "காத்தப்பப் பூலித்தேவர்" பிறந்த நாள் ..! வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலில் முழக்கமிட்ட தமிழர்..!!
இந்திய விடுதலை வரலாற்றில், 1751ஆம் ஆண்டில் முதன்முறையாக "வெள்ளையனே வெளியேறு" என்று வீர முழக்கமிட்டவர்.
இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர் புலித்தேவர் ஆவர்.
இவர் கடந்த 1715ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் "காத்தப்பப் பூலித்தேவர்" என்பதாகும்.
"பூலித்தேவர்" என்னும் பெயர் 'புலித்தேவர்" என்று கால போக்கில் அழைக்கப்பட்டது.
இந்திய விடுதலை வரலாற்றில், 1751ஆம் ஆண்டில் முதன்முறையாக "வெள்ளையனே வெளியேறு" என்று வீர முழக்கமிட்டவர்.
இவர், இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கு (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் புலித்தேவர் நினைவைப் போற்றும் வகையில் புலித்தேவர் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவற்றை தமிழக அரசு அமைத்துள்ளது.