#சேலம் || சிறுவன் இயக்கிய டிராக்டர் ஓட்டலுக்குள் புகுந்து விபத்து.! ஒருவர் பலி., இருவருக்கு காயம்.! - Seithipunal
Seithipunal


சேலம், புதுப்பேட்டையில் 16 வயது சிறுவன் இயக்கிய டிராக்டர் ஓட்டலுக்குள் புகுந்ததில் ஒருவர் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்துள்ள முல்லைவாடி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் மணல், ஜல்லி வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் 16 முதல் 18 வயதுள்ள இளைஞர்கள் இருவர் டிராக்டர் ஓட்டி வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில், இன்று ராஜாவுக்கு சொந்தமான டிராக்டர் ஒன்றை, ஆத்தூர் பகுதியில் இருந்து முல்லைவாடி பகுதிக்கு 16 வயது சிறுவன் ஒருவன் இயக்கி வந்துள்ளான், அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலை ஓரம் இருந்த ஸ்ரீ சரவணா டிபன் சென்டர் என்ற உணவு கடையில் உள்ளே புகுந்தது.

இந்த விபத்தில் ஆறுமுகம், புரோட்டா மாஸ்டர் உட்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்தில் புரோட்டா மாஸ்டர் மருதுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றொருவர் படுகாயம் அடைந்து உள்ளார். இவர்கள் இருவரும் தற்போது ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

டிராக்டர் உணவகத்தின் உள்ளே நுழைந்ததில், உணவகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேதமாகின. இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய 16 வயது சிறுவன் மற்றும் டிராக்டரின் உரிமையாளர் ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

salem hotel tractor accident


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->