சேலம் | மறைந்து வாழும் காதல் கணவர்! கர்ப்பிணிப் பெண்ணின் தொடர் போராட்டம்! - Seithipunal
Seithipunal


சேலம், ஓமலூர் அருகே உள்ள வேலகவுண்டனூரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். 

இவர் பவித்ரா என்ற பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பவித்ரா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மோகன்ராஜ் கடந்த மே மாதம் அவரை காஞ்சிபுரம் அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் மோகன்ராஜ் அவரது சகோதரிக்கு குழந்தை பிறந்தது என பார்ப்பதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான வேலகவுண்டனூருக்கு சென்று பின் அவரது மனைவி பவித்ராவை தொடர்பு கொள்ளவில்லை. 

இதனை அடுத்து பவித்ரா கணவரை தேடி 3 மாத கர்ப்பிணியாக வேலகவுண்டனூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றபோது மோகன்ராஜ் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து பவித்ராவை அவரது கணவரை பார்க்க அனுமதிக்காமல் அங்கிருந்து விரட்டி விட்டனர். 

இதனால் தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என ஓமலூர் அரசு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பவித்ரா கடந்த மாதம் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒரு மாதமாக விசாரணை நடத்தியும் மோகன்ராஜை கண்டுபிடிக்கவில்லை. மேலும் கணவர் வீட்டிற்குள் பவித்ராவை அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

இதனால் மறைத்து வைத்துள்ள கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி முதல் மோகன்ராஜ் வீட்டிற்கு முன்பு பவித்ரா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இதற்கிடையே மோகன்ராஜ் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு அவர்களது உறவினர்களை அனுப்பி பவித்ராவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் உடல் நலம் பாதித்த பவித்ரா ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

சிகிச்சை முடிந்து வந்த பவித்ரா மீண்டும் மோகன்ராஜ் வீட்டின் முன்பு அமர்ந்து 35 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Pregnant woman protest her husband keep with her


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->